தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தில் மாரடைப்பால் உயிரிழப்பு.

தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தில் மாரடைப்பால் உயிரிழப்பு.
தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தில் மாரடைப்பால் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா மின்னாம்பள்ளி அருகே உள்ள வன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 45. இவர் தனியார் சொகுசு பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்து இவரும் மற்றொரு ஓட்டுநரும் ஓட்டி வந்தனர். சுரேஷ் தனது பணியை முடித்த பிறகு, கரூரில் இறங்கிக் கொள்வதாக கூறி பேருந்தில் உறங்க சென்று விட்டார். மற்றொரு டிரைவர் பேருந்தை ஓட்டி வந்த நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வேளஞ்செட்டியூர் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே ஒருநாள் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை ஆறு மணி அளவில் வரும்போது, சுரேஷ் உடன் வந்த மற்றொரு டிரைவர் எழுப்பி உள்ளார். அப்போது அசைவற்ற நிலையில் அவர் இருந்ததால், உடனடியாக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பேருந்தில் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சுரேஷை பரிசோதித்த பிறகு ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுரேஷின் மனைவி எலிசபெத் ராணி வயது 38 என்பவர் இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சுரேஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story