ஆரணியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
Arani King 24x7 |17 Sept 2024 4:20 PM GMT
ஆரணியில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் ரொக்க பரிசு பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
ஆரணி. பாரத பிரதமர் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் மாவட்டதலைவர் சி.ஏழுமலை நோயாளிகளுக்கு பிரட், பழங்களை வழங்கினார். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார். பின்பு பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் சதீஷ், ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர் வேலவன் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் தீனன், நெசவாளர் அணி நிர்வாகிகள் கோபால், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Next Story