கண்டமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
Villuppuram King 24x7 |1 Oct 2024 11:07 AM IST
அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணியை 7 மாதங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருவதைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபணி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் வரவேற்றார்.தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்மணி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் மணிமாறன், கிளை செயலாளர் ஜெனகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். சர்வீஸ் சாலை போக்குவரத்திற்கு ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Next Story