திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலருக்கு மிரட்டல் கடிதம்

திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலருக்கு மிரட்டல் கடிதம்
X
போலீஸ் விசாரணை
குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன் (38) திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.  இவரது மனைவி உஷா குமாரி இவர் அதே பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாக்சன் அந்த பகுதியில் உள்ள ஆர் சி சர்ச் அருகே நின்று கொண்டிருக்கும்போது அங்கு பைக்கில் வந்த ஆறு பேர் கும்பல் ஜாக்சனை வெட்டிக் கொன்றனர்.         இது தொடர்பாக திருவட்டாறு போலீசில் உஷா குமாரி புகார் செய்தார். இது தொடர்பாக வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற விளாங்கன் (32) உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ராஜ்குமார் என்ற விலாங்கன் தலைமறைவாகிவிட்டார். மற்ற ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.        இந்த நிலையில் ஜாக்சனின் மனைவி உஷா குமாரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் -  ராஜ்குமார் என்ற விலாங்கன் எனது மச்சான். அவனிடம் ஜாக்சன் பிரச்சனை  செய்தான். பலமுறை சொல்லி பார்த்தும் கேட்காததால்  அவனை அடித்து கொலை செய்தான்.  உன்னையும்  உன் பிள்ளைகளையும் கொல்லாமல் விட வேண்டும் என்றால் எனது ஆசைக்கு நீ இணங்க வேண்டும் என்று மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளது.        இது தொடர்பாக உஷா குமாரி திருவட்டார் போலீஸ் மற்றும் மாவட்ட காவல் துறைக்கும் புகார் அளித்துள்ளார். இந்த கொலை பின்னணியில் தொடர்பு உள்ள ராஜ்குமார் எங்கே பதுங்கி இருக்கிறார்? அவருக்கு யார் அடைக்கலம் கொடுத்த வருகிறார்?  என்பது  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story