பத்யாவரம் பள்ளியில் தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டும் பயிற்சி.

பத்யாவரம் பள்ளியில் தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டும் பயிற்சி.
X
ஆரணி அடுத்த பத்யாவரம் பள்ளியில் தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டும் பயிற்சி சிகரம் தொடு என்ற தலைப்பில் நடைபெற்றது.
ஆரணி அடுத்த பத்யாவரம் புனிதவளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நிர்மாலமாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆரணி அரிமா சங்கம் சார்பில் தன்னம்பிக்கை மற்றும் வழி காட்டும் பயிற்சி சிகரம் தொடு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இதில் ஆரணி அரிமா சங்க தலைவர் எம்.மோசஸ் தலைமை தாங்கினார். புனிதவளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மதலைமுத்து அனைவரையும் வரவேற்றார். இதில் அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுனர் வி.எஸ்.தளபதி, மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரவணன் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். மேலும் இதில் இரண்டாம் துணை ஆளுநர் வி.பி.உதயசூரியன், மாவட்ட நிர்வாகி வி.பி.மணி, அரிமா சங்க செயலாளர் முருகானந்த், பொருளாளர் பரசுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story