வி.ஏ.ஓ.,தாக்கிய நபரை கைதுசெய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்:

வி.ஏ.ஓ.,தாக்கிய நபரை கைதுசெய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்:
X
வி.ஏ.ஓ.,தாக்கிய நபரை கைதுசெய்யக்கோரி எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்டு கம்யூ.,கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
வேலகவுண்டம்பட்டி அருகே, நருவலூர் கிராமத்தில் கடந்த 3ம்தேதி அப்பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் அரசுபுறம்போக்கு நிலத்தில் மரங்களை வெட்டி வேரோடு பிடுங்கியுள்ளார். இதைதட்டி கேட்ட அப்பகுதி வி.ஏ.ஓ.,ராமன் என்பவரை அடித்து கீழேதள்ளி பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளார். இது சம்பந்தமாக போலீசாருக்கு புகார்அளித்து இதுவரையில் திருமுருகனை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வேலூர் வார்டு உறுப்பினர் ஜோதிமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சக்திவேல், ஈஸ்வரன், -பாலகிருஷ்ணன், ராஜ், பூபதிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story