பரமத்தி வேலூர் ஸ்ரீபால ஐயப்பன் சுவாமி கோவிலில் பௌர்ணமி பூஜை.
X
Paramathi Velur King 24x7 |17 Oct 2024 8:40 PM IST
பரமத்தி வேலூர் ஸ்ரீபால ஐயப்பன் சுவாமி கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர். அக்.17: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீபால ஐயப்ப சுவாமி கோயிலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னதாக சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஐயப்ப சுவாமி கோவில் பௌர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story