தீன் நகரில் தந்தையை காண வந்த இடத்தில் குடும்பத் தகராறு. சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

தீன் நகரில் தந்தையை காண வந்த இடத்தில் குடும்பத் தகராறு. சிறுமி தூக்கிட்டு தற்கொலை.
தீன் நகரில் தந்தையை காண வந்த இடத்தில் குடும்பத் தகராறு. சிறுமி தூக்கிட்டு தற்கொலை. பீகாரைச் சேர்ந்த சஞ்ஜித்தாஸ் என்பவர்,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி அருகே உள்ள தீன்நகர் பகுதியில் டைல்ஸ் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்திருந்தார். இவரை பார்ப்பதற்காக இவரது மனைவி பவிதாதேவி வயது 38 மற்றும் இவர்களது மகள் கோமல் குமாரி வயது 16 ஆகியோர் பீகாரில் இருந்து சஞ்சய் தாஸ் வேலை செய்யும் இடத்திற்கு ஜனவரி 10ஆம் தேதி காலை வந்துள்ளனர். அப்போது பவித்ரா தேவி தனது மகள் கோமல் குமாரியை திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த கோமல் குமாரி சஞ்சித் தாஸ் வசித்து வந்த வீட்டில் காலை 7:45 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பவித்ரா தேவி அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சிறுமி கோமல் குமாரியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story