ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்புக்கு இதய பிரச்சினையே காரணம்: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம்
X
Chennai King 24x7 |4 Feb 2025 10:15 PM IST
ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். சிறுவனுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததால், அது தான் சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூரை அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் 9 வயது மகன் மைதீஸ்வரன்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கால்களில் உணர்விழப்பு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பது தெரியவந்தது. சிறுவனுக்கு இம்யூனோகுளோபளின் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார்.
Next Story