பரமத்திவேலூர் அருகே சாலை விபத்தில் பெண் உயிர் இழப்பு.

X

பரமத்தி வேலூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் பெண் உயிரிழப்பு.
பரமத்தி வேலூர்,ஏப்.6: பரமத்தி வேலூர் தாலுகா குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி.இவரது மனைவி விஜயா (68). இவர் சனிக்கிழமை மாலை தனது வீட்டிலிருந்து பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் வாங்குவதற்காக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக சாலையின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது குப்பிச்சிபாளையம் நோக்கி சென்ற ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையில் கடந்து சென்ற விஜயா மீது மோதியதில் விஜயா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் விஜயாவை மீட்டு உடனடியாக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விஜயாவின் மகன் செல்வராஜ் வேலூர் காவல் நிலையத்தில் விபத்து குறித்து புகார் செய்தார். புகாரி அடிப்படையில் சாலை விபத்தில் உயிர் இழந்த விஜயாவின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய குச்சிபாளையம் அருகே உள்ள மண்டபத்து பாறையைச் சேர்ந்த அல்லிமுத்து (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story