பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. சேகர் கோரிக்கை.

பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. சேகர் கோரிக்கை.
X
பிலிக்கல்பாளையத்தில் இருந்து கொடுமுடிக்கு காவிரி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ.சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பரமத்தி வேலூர்,ஏப்.8: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பரமத்திவேலூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பரமத்திவேலூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைத்தல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் அதிகமாக வரும் காலங்களில் உபரிநீரை கொண்டு காவிரி திருமணி முத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை இந்த அரசு கொண்டு வரவேண்டும். நாமக்கல் தொகுதியில் மோகனூர் ஒன்றியத்தில் பரமத்தி வேலூர் தொகுதியை சேர்ந்த 10 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன இதற்கு கூடுதல் நிதியினை வழங்கவேண்டும் என்று கூறினார். வேலூர், பரமத்தி, பொத்தனூர் பாண்டமங்கலம் மற்றும் வெங்கரை ஆகிய பேரூராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி கொடுக்க வேண்டும். பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3,600 சதுர அடியில் நூலகம் ஒன்று இயங்கி வரு கின்றது. தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான மருத்துவ படிப் பிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூலமாகத்தான் செல்கின்றார்கள். நீட் விதிவிலக்கு வரும் வரை மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளித்திடும் நீட் வகுப்பு மையம் ஒன்றை அமைத்து தரவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. சேகர் கூறினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர்கள் அதற்கான அரசு குழுவை அமைத்து ஆய்வு செய்து விரைவில் தீர்வு செய்யப்படும் என்று என தெரிவித்தனர்.
Next Story