சோளிங்கர் அருகே ரயில் மோதி முதியவர் பலி!

X

ரயில் மோதி முதியவர் பலி
காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 70). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்று உமாபதி சோளிங்கர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பெங்களூரு-அசாம் மாநிலம் நியூ தின்சுகியா ரயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story