சேலம் அருகே புளியமரத்தில் தர்மபுரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

X

போலீசார் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள கோம்பூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 50). அவருடைய மனைவி செல்வி. இவர்கள் இருவரும் கட்டிட தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 20-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே 21-ந் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற முனியப்பன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சேலம் அருகே அடிமலைபுதூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் முனியப்பன் லுங்கியால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முனியப்பன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story