நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலி

நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலி
X
போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் சக்திவேல் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு படித்த போது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இவர் கடந்த 24-ந் தேதி மதியம் 3 மணிக்கு நண்பர்களுடன் தோப்புக்காடு அருகே கிரிக்கெட் விளையாட சென்றார். அப்போது அங்கிருந்த பனை மரத்தில் ஏரி நுங்கு பறிக்க முயன்ற போது, மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அப்பகுதியினர் மீட்டு மின்னாம்பள்ளி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோபால் புகாரின் பேரில், நேற்று காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story