சேலத்தில் பரிதாபம் தடுப்பு சுவரில் மோதி மாணவன் பலி

சேலத்தில் பரிதாபம் தடுப்பு சுவரில் மோதி மாணவன் பலி
X
போலீசார் விசாரணை
சேலம் குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவருடைய மகன் நகுல் (வயது 17). சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று மாலை தனது நண்பரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கிகொண்டு அதில் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து நகுல் பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story