குளத்துபாளையம் அருகே டூ வீலரில் சென்றவர் மீது பொலிரோ பிக் அப் வாகனம் மோதி விபத்து.

குளத்துபாளையம் அருகே டூ வீலரில் சென்றவர் மீது பொலிரோ பிக் அப் வாகனம் மோதி விபத்து.
குளத்துபாளையம் அருகே டூ வீலரில் சென்றவர் மீது பொலிரோ பிக் அப் வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம், பவித்திரம் அருகே சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னாச்சாலம் வயது 70. இவர் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் குளத்துப்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் பஸ் பாடி நிறுவனம் அருகே சென்றபோது, அதே சாலையில் பின்னால் வந்த திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோளிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வாகனம் ரத்னாச்சலம் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த ரத்னாச்சலத்தின் மகன் நமச்சிவாயம் வயது 46 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பொலிரோ பிக் அப் வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளவரசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story