எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்ன தாராபுரம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சந்தானம் வயது 75. இவர் ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 7:15 மணி அளவில், தாராபுரம்- கரூர் சாலையில் எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சென்றார். அப்போது கரூர், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் வயது 21 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற சந்தானம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சந்தானத்தின் மனைவி வெள்ளையங்கிரி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி,எ விபத்து ஏற்படுத்திய கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.
Next Story