முல்லை நகரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

முல்லை நகரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
முல்லை நகரில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம், மலைக்கோவில் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் வயது 67. இவர் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 10:15- மணி அளவில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து டிஎன்பிஎல் செல்லும் சாலையில் நடந்து சென்றார் அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு நடந்த சென்றபோது ,அதே சாலையில் வேகமாக வந்த புகலூர் தாலுகா, தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற சிவராஜ் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சிவராஜ் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பரணிதரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலையதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story