வார சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி ஞாயிறு வார சந்தையில் நாட்டுக்கோழிகள் 4 லட்சத்துக்கு விற்பனை
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்தியேகமான வார சந்தை நடக்கிறது. இந்த நிலையில் இன்று ஏப்ரல் 27 காலை வார சந்தை கூடியது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுக் கோழிகளை விற்க & வாங்க வந்திருந்தனர். இன்று நாட்டுக்கோழிகள் தரம் மற்றும் ரபத்தை பொறுத்து கோழிகள் 300 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரையில் விற்பனையானது இன்று 4 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story