வெண்ணமலை அருகே டூவீலரில் வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.

வெண்ணமலை அருகே டூவீலரில் வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.
வெண்ணமலை அருகே டூவீலரில் வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். ஈரோடு மாவட்டம், செட்டிபாளையம் புதூர், இந்தியன் நகர், 9வது தெருவை சேர்ந்தவர் மோதி விக்னேஷ் வயது 34. இவர் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் வெண்ணமலை தனியார் கல்லூரி வளைவு அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த மோதி விக்னேஷின் மாமனார் கணேசன் வயது 58 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோதி விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story