வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மேலும் இருவர் பலி.

மதுரை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்ததில் நேற்றிரவு ஒருவரும் இன்று காலை இருவரும் உயிரிழந்தனர்.
மதுரை அருகே வலையங்குளத்தில் நேற்று இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் காயம் அடைந்தனர். மூவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வெங்கட்டி அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே நேற்று (மே.19) இரவு உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று (20.05.2025) காலை சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மதுரையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story