சிவாலயத்தில் அஷ்டமி பூஜை வழிபாடு

மதுரை மேலூர் அருகே சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத, தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு இன்று (மே.20) நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு அருள்மிகு காலபைரவர் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. அருள்மிகு காலபைரவர் சுவாமி வண்ணப் பூக்களால், அலங்காரம் செய்து, சர்வ அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்களுக்கு தயிர் சாதம், உளுந்து வடை அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story