பாண்டமங்கலம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

X

பாண்டமங்கலம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்,ஜூன்.16: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பூதங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் கார்த்திகா (21). இவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர். இந்நிலையில் லோகேஷ் அவரது மனைவி கார்த்திகாவும் கொளகாட்டுபுதூரில் குடும்பம் நடத்தி வந்தனர். கார்த்திகா கரூரில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான பியூட்டி பார்லருக்கு வேலைக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்த கராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரத்தியில் இருந்த கார்த்திகா வீட்டில் யாரும் இல்லாத போது துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார். வெளியில் சென்றிருந்த லோகேஷ் வந்து பார்த்தபோது கார்த்திகா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து கார்த்திகாவின் உடலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து லோகேஷ் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கார்த்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story