ஜேடர்பாளையம் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி.

X

ஜேடர்பாளையம் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
பரமத்திவேலூர், ஜூன்.27: பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே அரசம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை யாக ஜேடர்பாளையம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லதனது மொபட்டில் சோழசிராமணிலையில் சென்று கொண்டிருந்தார். கொத்தமங்கலம் தபால் நிலையம் அருகே சென்றபோது சின்னுசாமி முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ்சை முந்த திடீரென திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மொபட் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story