ஜேடர்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

ஜேடர்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.
X
ஜேடர்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஜூன்.27: பரமத்திவேலூர் தாலுகா, கபிலர் மலை அருகே உள்ள மேட்டாம் பாறை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), விவசாயி. இவர் கடந்த சில ஆண்டாக உடல் நலக்குறை வால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த ராமசாமி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராமசாமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story