ராமநாதபுரம் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

X

அமிர்த வித்யாலயம் பள்ளி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா அவர்கள் உறுதுணையாகவும் பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இராமநாதபுர மாவட்ட துணை ஆய்வாளர் திரு. தங்க ஈஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றி சிறப்புற உரையாற்றிய பின்னர் மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து 2024 -25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கும், ஐஐடி தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கும் கேடயம் வழங்கி இம்முகாமினைச் சிறப்புச் செய்தார்.
Next Story