ராமநாதபுரம் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது

மூலைக்கரைப்பட்டி செல்வ கருப்பண சுவாமி ஆலய 17 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா மேளதாளம் இசை வாத்தியங்கள் முழங்க அக்கினி சட்டி எடுத்து பூஜை பெட்டிகளுடன் திரியாட்ட 108 பால்குடம் ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ கருப்பண்ண சுவாமி 17ம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு உற்சவர் கருப்பணசுவாமி மூலவர் சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆவணங்கள் பூஜை பொருட்கள் அடங்கிய பூஜை பெட்டியை கோவில் பூசாரி சுமந்து செல்ல பூஜை பெட்டியை தொடர்ந்து சென்ற பக்தர்கள் திரியாட்டம் அக்கினி சட்டி எடுத்து 108 பால் குடங்களை பக்தர்கள் சிம்லா கொட்டு மேளம் இசை வாத்தியங்கள் வான வேடிக்கைகளுடன் மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாம்புலம்மன் ஆலயத்தில் இருந்து துவங்கிய பால்குடம் அக்கினி சட்டிகளை பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் ஊர்வலமாக சென்று ஸ்ரீ செல்வ கருப்பண்ண சுவாமி ஆலயத்திற்கு சென்று ஆலயத்தை சுற்றி வலம் சென்று மூலவர் செல்வ கருப்பண்ணசாமிக்கு பாலாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூலைக்கரைப்பட்டி கிராம இளைஞர்கள் நிர்வாகிகள் செய்தனர்
Next Story