ராமநாதபுரம் பொதுமக்களுடன் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு நடைபெற்றது

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. பொதுமக்களுடன் காவல்துறை கலந்துரையாடல் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூரில், தமிழக அரசின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. பொதுமக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் பேரையூரில் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 9 சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி காவியஜனனிக்கு பரிசுப் பொருளும் ரொக்க பரிசு கொடுத்து பாராட்டினார், அதேபோல பேரையூர் பகுதியில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ், கிராமங்களில் சிசிடிவி பொருத்துவதால் குற்றங்கள் குறைந்து வருகிறது, இளைஞர்கள் வீண் வம்புக்கு செல்லக்கூடாது, சண்டைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் அதை தவிர்த்து 2 பேர் சண்டையை ஊர் பிரச்சனையாக்க கூடாது என பொதுமக்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story