ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உப்பு தண்ணீர் பாட்டிலுடன் முற்றுகையிட்டு போராட்டம்

X

சுப்பு தேவன் வலசை கிராமத்தில் தனி நபர்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிதண்ணீரை விற்பனை செய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உப்புநீராக மாறியதாகவும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் அருகே சுப்பு தேவன் வலசை கிராமத்தில் தனி நபர்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிதண்ணீரை விற்பனை செய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உப்புநீராக மாறியதாகவும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உப்பு தண்ணீர் பாட்டிலுடன் முற்றுகையிட்டு போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு தெருவை ஊராட்சி சுப்பு தேவன் வலசை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் நல்ல சுவையான குடிநீர் நிலத்தடி நீர் அமைந்ததால் ஏராளமான வெளியூர் சேர்ந்த நபர்கள் இடங்களை வாங்கி வைத்திருந்தனர் தற்போது அந்த இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீரை விற்பனை செய்து வருகின்றனர் சுப்பு தேவன் வலசை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறைந்து உப்பு தண்ணீராக மாறி உள்ளதாகவும் தங்களுக்கு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை சுப்பு தேவன் வலசை பகுதிக்கு குடிநீர் சாலை வசதி மின்சார வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் எங்க பகுதியில் உள்ள கிணறுகளில் உப்பு நீராக மாறி உள்ளதை பாட்டிலில் அடைத்து மாதிரி நீரை எடுத்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் தங்களுடைய கிராமத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் ஏற்பாடு செய்து தருவதாகவும் அதுவரை பொறுமையாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்தனர் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் எங்கள் தொகுதி பக்கம் வந்ததே இல்லை திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் ஒதுக்கப்பட்ட பகுதியாக சுப்பு தேவன் வலசை உள்ளதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் குடிநீருக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்கள் ஊருக்கு இதுவரை வந்ததும் இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்
Next Story