நெமிலி பேரூராட்சி மன்ற கூட்டம்

X

நெமிலி பேரூராட்சி மன்ற கூட்டம்
நெமிலி பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் ரேணு காதேவி சரவணன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் எழிலரசி, துணைத்தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட விஜயபுரம், காவேரிபுரம், அருந்ததியர்பாளையம், புன்னை, சாய்ராம் நகர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலைகளை சீரமைப்பு செய்தல், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காபொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். இதில் பேரூராட்சி அலுவலர் நந்தகுமார், மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story