என்பிகேஆர்ஆர் சர்க்கரை ஆலை ஒப்பந்ததாரர்களாலும் அதிகாரிகளாலும் அழிக்கப்பட்ட வரலாறு

X

மயிலாடுதுறையில் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017ல் மூடப்பட்து அது வருமா வராதா மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினர் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987ல் எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிகாலத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்மை சர்க்கரை ஆலை என்ற பெயரை எடுத்ததுடன் ஆலை உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கிய ஒரே சர்க்கரை இதுவாக இருந்தது. தினந்தோறும் 1500 டன் கரும்பு பிழியும் திறன் கொண்டிருந்து ஆலை நல்ல லாபத்தில் இயங்கியதால் 3000 டன் பிழிதிறன்கொண்ட ஆலையாக தரம் உயர்த்த வேலை நடந்தபோது ஒப்பந்ததாரராக சாராய உடையார் அந்த வேலையை எடுத்து செய்தபோது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது, அதைக் கண்டித்து ஆலையில் இருந்த உயர் அதிகாரிகள் ஆலையை விட்டே ஓடிவிட்டனர், தரம் உயர்த்திய ஆலையை பெற்றுக் கொள்ள மேலிடம் மூலம் அழுத்தம் கொடுத்து ஆலை இயங்க ஆரம்பித்தபோது 3000டன் கரும்பு பிழிந்து அதை கொதிக்க வைக்கும் கொதிகலன்கள் சரிவர வேலை செய்யாததால் கரும்புச் சாறு ஆலையின் பின்பக்கம் பிடுங்கிவிடப்பட்டது, வழக்கம்போல் 1500 டன் அளவிற்கே ஆலை வேலை செய்தது, கரும்பு டன் அதிகமாக இருந்தும் சர்க்கரை அளவு குறைந்ததால் விவசாயிகளுக்கு உரிய தொகை கொடுக்கமுடியாமல் தவித்தபோது அவ்வப்பொழுது போராட்டம்நடைபெற்றுவந்தது- ஆலையை மீண்டும் புணரமைத்தால் மட்டுமே இயக்க முடியும் என்பதால் அரசு ஆலையை சரிசெய்ய நிதி ஒதுக்கவில்லை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 110 விதியின்கீழ் நிதி ஒதுக்க அறிவித்திருந்தார், ஆனால் அவர் இறந்துவிட்ட நிலையில் அதற்குப் பிறகு வந்த அரசு கலவனம் செலுத்ததால் 2017ல் ஆலை மூடப்பட்டது. திமுக அரசு தமது தேர்தல் அறிக்கையில் அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட சர்க்கரைஆலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர், 4 ஆண்டுகள் கடந்தநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, இதுகுறித்து 26ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இப்போ வரும் அப்போ வரும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் 4 ஆண்டுகளும் முடிந்துவிட்டது, கூட்டுறவு சர்க்கரை ஆலை வருமா வராதா என்று மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கேட்டபோது, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய பதில் தரப்படும் என்றார். கலந்துகொண்ட விவசாயிகள் 500 நபர்களில் 400பேர் இந்த சர்க்கரைஆலைக்கு கரும்பு அனுப்பியவர்கள் என்றும் தற்பொழுது நெல் விவசாயத்திற்கு மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story