கூட்டு சேர்ந்து விலையை குறைத்த பருத்தி வியாபாரிகள் விவசாயிகள் போராட்டம்.

X

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலத்தில் குறைந்த விலை - சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்:-
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7400-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5600-க்கும் சராசரி விலையாக ரூ.6400-க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். குறைந்த விலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வியாபாரிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் விற்பனை கூடம் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த குத்தாலம் காவல் ஆய்வாளர் மகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர். குறைந்த விலைக்கு ஏலம் போன பருத்தியை விற்பனை செய்ய மறுத்து பல விவசாயிகள் மறுஏலத்தில் கலந்த கொள்வதாக தெரிவித்தனர். கடன் வாங்கி செலவு செய்து விளைவித்த பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Next Story