நியாய விலைக் கடை ஊழியர்கள் போராட்டம்

X

நியாய விலை கடைகளில் ப்ளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கவேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது
நியாய விலை கடைகளில் பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் பொருள்களை விநியோகிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை களைய கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பரதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ப்ளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களை சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், நியாயவிலை கடைகளில் ஏற்படும் பணிச்சுமைகளை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவரை அனுமதிக்க வேண்டும், அதுவரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்தி கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 400 க்கும மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
Next Story