தேர்தலில் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் - அமைச்சர் நேரு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் கடுமையாக பணியாற்றினால் வெற்றி நிச்சயம் அமைச்சர் கே என்.நேரு, திமுகவினருக்கு அறிவுரை:-
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் கடுமையாக பணியாற்றினால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், மண்டல திமுக பொறுப்பாளருமான கே.என்.நேரு திமுகவினருக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், அவர் பேசியது:  அதிமுக தற்போது இறங்குமுகத்தில் உள்ளது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுவிட்டால், அதன்பின் அதிமுக என்ற கட்சி இருக்காது. சுதந்திர போராட்ட தியாகி சாமி.நாகப்பன், மொழிப்போர் தியாகி சாரங்கபாணி ஆகியோருக்கு மயிலாடுதுறையில் சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு தீர்மானம் நிறைவேற்றித் தந்தால், சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுக கூட்டணியில் அமித்ஷா சென்னையில் அதிமுக தலைமையில் ஆட்சி என்கிறார். மதுரையில் கூட்டணி ஆட்சி என்கிறார். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக முதல்வர் 10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள யாரையும் விடாமல் வைத்துள்ளார். திமுகவினர் கடுமையாக பணியாற்றினால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்றார். இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன், எம்எல்ஏ எம்.பன்னீசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story