நான் அரசுப்பள்ளியில் படித்வள்-எம்பி சுதா பேச்சு

நான் அரசுப்பள்ளியில் படித்வள்-எம்பி சுதா பேச்சு
X
நான் எம்பியாக நின்று பேசுவதற்கு அரசுபள்ளியில் படித்ததுதான் என்று மயிலாடுதுறை எம்.பி அரசு பள்ளியில் பயிலும் மாணவிளுக்கு தன்னம்பிக்கை பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் டெஸ்க் மற்றும் பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் அம்பிகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் பங்கேற்று மாணவிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை எம்பி சுதா தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். எம்.பி சுதா கூறுகையில், பின்தங்கிய கிராமத்தில் நான் கல்வி பயின்றேன். கட்டிடங்கள் இல்லாத பள்ளியில் மரத்தடி நிழலில் 9ஆம் வகுப்பு வரை படித்தேன். பஞ்சாயத்து தலைவரான என்தந்தை பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டி கொடுத்தார். தன் பிள்ளை அரசு பள்ளியில் படித்தால்தான் எல்லா பிள்ளைகளும் அரசு பள்ளியில் படிக்க வருவார்கள் என்று என்னை அரசு பள்ளியில் சேர்த்தார். அரசு பள்ளியில் படித்தால் டாக்டர், வழக்கறிஞர், எம்எல்ஏ, எம்பி, முதலமைச்சர், குடியரசு தலைவர், பிரதமராகவோ வரமுடியாது என்று யாரும் நினைக்க வேண்டாம். அரசு பள்ளியில் படித்த நிறையபேர் உலகத்தில் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய சாதனைகள் படைத்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் இருக்கிறோம் இங்கிருந்து நகர முடியாது என்ற என்னத்தை முதலில் தூக்கி போட்டுடுங்க. இந்த பள்ளியில் படித்த 2 பேர் ஜெர்மன் போயிருப்பதாக ஆசிரியர்கள் கூறியது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் அரசுப்பள்ளியில் படிக்கும்போது காமராஜர் கொடுத்த மதிய உணவு திட்டத்தால் மிகவும் பயனடைந்தேன். அந்த உணவுதான் உடலில் ரத்தமாக கலந்துள்ளது. இன்று மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்காக நான் எம்பியாக நின்று பேசுவதற்கு காரணம் இலவச கல்வி, மதிய உணவு திட்டத்தை கொடுத்த காமராஜர், முதலமைச்சர் கொடுத்த காலணி பல்வேறு திட்டங்களினால் ஒவ்வொரு படிக்கட்டாய் ஏறிவரும்பொது மனது உறுதியாகும் நம் லட்சியத்தை அடைய முடியும் என்றார். எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அப்துல்கலாம் சொன்னதை கடைபிடித்தால் 200 சதவீதம் ஜெயிக்கலாம். பெண்கள் சாதிக்காத துறையே கிடையாது என்றார். நன்றாக படியுங்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சொல்லிகொடுக்கும் அறிவுரைகளை கடைசி காலம்வரை கடைபிடியுங்கள் என்றார்.
Next Story