ராமநாதபுரம் வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேரவை கூட்டம் ராமநாதபுரம் வளர்ச்சி துறை மஹாலில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சித் துறை மஹாலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகர் சங்கத்தின் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமை வைத்தார். மாவட்ட இணைச்செயலாளர் மன்சூர் வரவேற்றார் மாநில தலைவர் ரமேஷ் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வைத்தார். சங்கத்தின் மஹாலில் வெளியில் ஊன்றப்பட்டகொடிமரத்தித்தில் கொடி ஏற்றப்பட்டு அலுவலர்கள் சல்யூட் செய்தனர். இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் லஞ்ச ஊழல் தடுப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பிற மாவட்டங்கள் போல விரைவாக பணியிடங்களை வழங்க வேண்டும்.அலுவலக உதவியாளர் இரவு காவலர்கள் சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story