ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு மாநில அனைத்து கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ப்ளூடூத் மூலம் மின்னணு தராசு இணைக்கப்பட்டு கருவிழி திரை மூலம் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படுவதாகல் தாமதமாவருகிறது. எனவே ப்ளூடூத் முறையை நிறுத்த வேண்டும், நகர்வு செய்யப்படும் பொருள்களின் அளவு குறைவாக வழங்குவதை சரியான முறையில் வழங்க வேண்டும், விடுமுறை நாட்களில் பணியாளர்களுக்கு பல்வேறு பணிகளை தருவதை நிறுத்த வேண்டும், விற்பனையாளர்களுக்கும் சம பணியாளருக்கு ம் பதவி உயர்வில் சம வாய்ப்பு கோருதல் விற்பனையாளர் இருக்கும் இடத்திலிருந்து குறைந்தபட்ச தூரத்திற்கு பணிமாருதல் செய்தல் இதில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படும் நிலையில் உள்ளனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மாவட்டச் செயலாளர் குஞ்சரபாண்டியன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கௌரவ தலைவர் ஜி. முத்துராமலிங்கம், கௌரவ செயலாளர் கே. கிருஷ்ணன், முன்னிலையிலும் நடைபெற்றது.
Next Story