ராமநாதபுரம் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

X

கமுதி தேவர் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ.தர்மர் தலைமையில் நடைபெற்றது. போதை இல்லா சமுதாயம் வேண்டும் " என்ற உயரிய நோக்கோடு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் த.மேரிசுஜின் வரவேற்றார். போதை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். அ.முகம்மது அசாரூதீன் முகவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கமுதி உதவி ஆய்வாளர் கெüதம் " போதை இல்லா தமிழகம் " என்ற தலைப்பில் போதையின் தீமை, சுய ஒழுக்கம், போதை இல்லா சமுதாயம் படைப்பதில் இளைஞர்களின் பங்கு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக போதை தடுப்பு உறுதி மொழியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.பூ.கஜேந்திரநாயகம் வாசிக்க மாணவர்கள் பின்தொடர்ந்தது உறுதி மொழி ஏற்றனர். பேராசிரியர் மாமல்லன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதை தடுப்பு குழுவினர் செய்தனர்.
Next Story