ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்

அம்மன் கோவில் கிராமத்தில் சமுதாயக்கூடம் மற்றும்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட தெற்குதரவை ஊராட்சி அம்மன் கோயில் பகுதியில் திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 42 லட்சம் மதிப்பிட்டில் கட்டி முடிக்கப்பட்ட அம்மன்கோயில் சமூதாயக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம் திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, 35 லட்சம் மதிப்பிட்டில் புதிய பள்ளி கட்டடம் கட்டுமான பணியை சட்டப் பேரவை உறுப்பினர்கள் கருமாணிக்கம்,காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர்,ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜா ராம் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story