திமுக உறுப்பினர் சேர்க்கை திட்டம் பயிற்சி கூட்டம்

அரூரில் முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை திட்டம் பயிற்சி கூட்டம்
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, மாநில சுயாட்சியை மீட்டெடுக்க தி.மு.கழகம் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் வகையில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை திட்டம் பயிற்சி கூட்டம்.தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் கூட்டம் அரூரில் நடைபெற்றது. அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி அனைவரையும் வரவேற்றார். தருமபுரி மேற்கு மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் அரூர் சட்டமன்ற தொகுதி தமிழழகன் மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினராக பதிவு செய்வது, மற்றும் புதுப்பிப்பது, திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வோரு வீடுவீடாக சென்று எடுத்துக்கூறி திமுக வில் உறுப்பினராக பதிவு செய்வது, தொடர்பாக செயலி மூலம் LED காட்சி திரை வழியாக BDA,BLA2,களுக்கு பயிற்சி வழங்கினார். தொடர்ந்து தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் செய்தியாளர்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் அரூர் சட்டமன்ற தொகுதியில் 100000 உறுப்பினர்களை சேர்பது, ஒவ்வோரு வாக்கு சாவடியிலும் 100% குடும்பங்களை D2D வீடுவீடாக சென்று சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை சொல்லி அவர்களை திமுக உறுப்பினராக பதிவு செய்வது, திமுக ஆட்சி 7வது முறையாகவும், தலைவர் ஆட்சி இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க தருமபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கூறினார்.
Next Story