ஆற்று நீரை திறக்க முயன்ற தகராறில் ஒருவர் படுகாயம் மூவர் கைது

சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்று சட்ரசை மதுபோதையில் திறக்க முயன்ற அதிமுகவினரை தட்டிக் கேட்ட திமுக கிளைச்செயலாளாரை தாக்கிய அதிமுகவை சேர்ந்த 3 பேர் சிறையில் அடைப்பு
மயிலாடுதுறை சங்கரன்பந்தல் கீழத் தெருவை சேர்ந்த சுதாகர் (41) திமுக உத்தரங்குடி கிளைச் செயலாளர். இவர் கடந்த 26 ஆம் தேதி சங்கரன்பந்தல் வீரசோழன் ஆறு சட்ரசில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். மது அருந்தி கொண்டிருந்த இலுப்பூர் கிராமத்தில் வசிக்கும் ராகவேந்திரன் (32), ராஜ்குமார் (25), அஜித்குமார் (26) ஆகிய மூவரும் சட்ரஸ் தண்ணீரை திறந்து விட முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்த சுதாகர் உடனடியாக அவர்களிடம் சென்று சட்ரசை தூக்கினால் தண்ணீர் ஆற்றில் சென்று வீணாகிவிடும் எனக்கூறி தடுத்துள்ளார், . அப்போது சட்ரஸ் படியில் நின்று கொண்டிருந்த சுதாகரை 3 பேரும் அடித்து தள்ளியதில் சுதாகர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார், 3பேரும் தப்பியோடிவிட்டனர். சுதாகர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொறையார் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சுதாகரை கொல்ல முயற்சித்ததாக ராகவேந்திரன் ராஜ்குமார் அஜித்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story