மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீரால் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீரால் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீரால் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு. கர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழையால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கும் அளவுக்கு சென்றது. மேட்டூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை கொள்ளளவான 120 அடியை எட்டியதுபோக உபரியாக 58 ஆயிரம் கன அடி நீரை காவிரி ஆற்றில் திறந்து விட்டனர். இதன் தொடர்ச்சியாக கரூரில் உள்ள மாயனூர் காவிரி ஆற்றில் கதவனைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 31,169 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அதேசமயம் காவிரி ஆற்றில் 30 ஆயிரத்து 349 கன அடி நீரும்,3- பாசன வாய்க்கால்களில் 820 கன அடி நீரும் திறக்கப்பட்டது. காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாயனூர் கதவனைக்கு அதிகப்படியாக நீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story