நின்றிருந்த முதியவர் மீது லாரி மோதியதில் முதியவர் பலி

குமாரபாளையம் அருகே நின்றிருந்த முதியவர் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்.
மீட்டு, இவர் நேற்று காலை 07:00 மணியளவில் பல்லக்காபாளையம் லேத் பட்டறை அருகே டி.வி.எஸ்.50ல் இருந்தவாறு நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக இவருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று, இவர் மீது வேகமாக மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், லாரி ஓட்டுனர், சங்ககிரி, குப்பனூரை சேர்ந்த மோகன்ராஜ், 22, என்பவரை கைது செய்தனர்.
Next Story