தொப்பூர் பிரிவு - கணவன் மனைவி சென்ற டூ வீலர் மீது கார் மோதி மனைவி உயிரிழப்பு.

தொப்பூர் பிரிவு - கணவன் மனைவி சென்ற டூ வீலர் மீது கார் மோதி மனைவி உயிரிழப்பு.
தொப்பூர் பிரிவு - கணவன் மனைவி சென்ற டூ வீலர் மீது கார் மோதி மனைவி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , தென்னிலை , துக்காட்சிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சுலோச்சனா வயது 59. இவர்கள் இருவரும் நேற்று ஜூலை 7-ம் தேதி காலை 8 மணி அளவில் தென்னிலை- கொடுமுடி செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். தொப்பூர் பிரிவு அருகே வந்த போது , எதிர் திசையில் சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஈஸ்வரனுக்கு பலத்த காயமும், அவரது மனைவி சுலோச்சனாவுக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே சுலோச்சனா உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகன் ஈஸ்வரன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story