கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்


மதுரை பெருங்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
மதுரை பெருங்குடி அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி கட்டணம் 1500 ரூபாய் இருந்தி நிலையில் தற்போது மின்சார கட்டணம், டியூசன் பீஸ் என 5000 ரூபாய் வசூல் செய்வதாக கூறி சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஏழு மாணவர்களை நேற்று (ஜூலை.10) தற்காலிகமாக ஒழுங்கு நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி இன்று (ஜூலை.11) மாணவர்கள் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story