பெரியாண்டாங் கோவில்-பணியின் போது மயங்கி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.

பெரியாண்டாங் கோவில்-பணியின் போது மயங்கி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.
பெரியாண்டாங் கோவில்-பணியின் போது மயங்கி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் வயது 27. இவர் கரூர் பெரியாண்டாங் கோவில் காவிரி நகர் பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை 7:20 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த முகேஷ் குமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த முகேஷ் குமாரின் தந்தை சண்டேஸ்வர் ராய் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story