கல்லூரி மாணவி மாயம். தாயார் புகார்

கல்லூரி மாணவி மாயம். தாயார் புகார்
X
மதுரை மேலூர் அருகே கல்லூரி மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் கீழவளவு அருகே சேக்கிப்பட்டி காலனியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ஆரத்தி ( 19) என்பவர் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தாயார் செல்வி நேற்று (செப்.11) மதியம் மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story