பழனி முத்து நகர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு.

பழனி முத்து நகர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு.
பழனி முத்து நகர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட நஞ்சை புகலூர் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத உடல் இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பழனி முத்து நகர் காவிரி ஆற்று பகுதியில் சென்று பார்த்த போது 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இருப்பதைஉறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து ரவி வேலாயுதம் பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரில் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடலை அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story