குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்

X

ராஜாக்கமங்கலம்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் சம்பகுளம் உள்ளது. சம்பவ தினம் குளத்தில் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம அலுவலரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை இல்லாத நிலையில் காணப்பட்ட குழந்தை சுமார் 1 மாத குழந்தை என தெரிய வருகிறது. தலையை துண்டித்து குழந்தையை கொலை செய்து வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Next Story