குழித்துறை ஆற்றில் மூழ்கி இன்ஞ்ஜினியர் பலி

X

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருபா, இவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மேலாளர். தற்போது திமுக இலக்கிய அணியின் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார். இவரது ஒரே மகன் ஸ்டாலின் கிருபா (39 ), பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை. தற்போது ஊரில் உள்ளார். நேற்று குழித்துறை ஆற்றில் குளிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை அவரது தந்தை ஆற்றுக்கடவில் சென்று பார்த்த போது, அவரது துணிகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. உடனடி குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருபா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story